வருமா.. வராதானு குழப்பத்தில் சிக்கி தவிக்கும் வாரிசு! துணிவுடன் இறங்கி கூலாக தியேட்டர்களை புக் பண்ணும் உதயநிதி

First Published Nov 15, 2022, 11:58 AM IST

வாரிசு படம் பொங்கலுக்கு வருமா வராதானு ஒருபக்கம் குழப்பம் நீடித்து வர, மறுபுறம் அஜித்தின் துணிவு படத்தின் வேலை படு ஜோராக நடைபெற்று வருகிறது. 

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு படமும் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின் விஜய், அஜித் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் திரைகாண உள்ளதால் ரசிகர்களும் இப்படத்தைக் காண ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படங்களுக்கான ரிலீஸ் பணிகளும் ஒருபுறம் மும்முரமாக நடந்து வந்தது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பால் வாரிசு பட ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாரிசு படத்தை தமிழைப் போல் தெலுங்கிலும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், சங்கராந்தி பண்டிகைக்கு தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்... உதயநிதி தயாரிக்கும் படத்தில் சம்பளமே வாங்காமல் பணியாற்றும் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் - காரணம் என்ன?

வாரிசு நேரடி தெலுங்கு படம் இல்லை என்பதால் இப்படத்திற்கு அங்கு குறைவான தியேட்டர்களே கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஜனவரி 26-ந் தேதிக்கு தள்ளிவைத்துவிடலாமா என்கிற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறு வாரிசு படம் வருமா வராதானு ஒருபக்கம் குழப்பம் நீடித்து வர, மறுபுறம் அஜித்தின் துணிவு படத்தின் வேலை படு ஜோராக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தற்போது தியேட்டர்களை புக் செய்யும் பணிகளை தொடங்கிவிட்டது. இதனால் அதிகளவிலான தியேட்டர்கள் துணிவு படத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சில ‘நாய்’யால சீக்காளி ஆனேன் - இயக்குனர் ஷங்கரை சீண்டினாரா வடிவேலு?... சர்ச்சையை கிளப்பிய அப்பத்தா பாடல்

click me!