கூட்டமின்றி காத்துவாங்கிய தியேட்டர்... ராங்கி படத்தின் முதல் ஷோ பார்க்க ஆசை ஆசையாய் வந்து அப்செட் ஆன திரிஷா

First Published Dec 30, 2022, 11:08 AM IST

ராங்கி படத்திற்காக சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் திரிஷாவுக்கு பிரம்மாண்ட கட் அவுட் எல்லாம் வைக்கப்பட்டு இருந்தது.

தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருவபர் திரிஷா. இவருக்கு வயது 40-ஐ நெருங்கி வந்தாலும், 20 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தாரோ இன்றளவும் அதேபோன்ற இளமையுடனும் அழகுடனும் இருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள திரைப்படம் ராங்கி. இதில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார் திரிஷா. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சரவணன் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஒரு வழியாக ரிலீஸ் ஆகி உள்ளது.

நடிகை திரிஷா நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. குறிப்பாக அதில் திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து இருந்தது. இதன்காரணமாக ராங்கி படத்திற்கு அதே அளவு ஓப்பனிங் கிடைக்கும் என நினைத்து காலை 7 மணிக்கு ஸ்பெஷல் ஷோ போடப்பட்டது.

இதையும் படியுங்கள்... நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் நல்ல படம்... அது பிளாப் ஆனதற்கு அவர்கள் தான் காரணம்- என்ன வடிவேலு இப்படி சொல்லிட்டாரு?

இதற்காக சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் திரிஷாவுக்கு பிரம்மாண்ட கட் அவுட் எல்லாம் வைக்கப்பட்டு இருந்தது. காலையில் திரிஷா தியேட்டருக்கு வந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தார் திரிஷா. இதையடுத்து உள்ளே படம் பார்க்க சென்றபோது தான் திரிஷாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தியேட்டரில் கூட்டமே இல்லாமல் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்ததை பார்த்து திரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அந்த தியேட்டரிலேயே பால்கனியின் மட்டும் தான் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. ஏனெனில் அங்கு இருந்தவர்கள அனைவரும் ராங்கி படக்குழுவினர். தன் படத்தின் முதல் காட்சிக்கு கூட்டம் அலைமோதும் என ஆசை ஆசையாய் வந்த திரிஷாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தான் வர உள்ளது தெரிந்தும் படம் பார்க்க கூட்டம் வராதது திரிஷாவை அப்செட் ஆக்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு உரிமையை தட்டித்தூக்கிய ‘வாரிசு’ தயாரிப்பாளர் - இதென்ன புது டுவிஸ்டா இருக்கு..!

click me!