பின்னர் போலீசார் ஈஸ்வரி (46) என்பவரை கைது செய்த பின்னர், அவருக்கு உறுதுணையாக இருந்த வெங்கடேசன் (44) என்பவரையும் கைது செய்தனர். இவர்கள் இவரிடமிருந்தும், இதுவரை 100 பவுன்ஸ் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள்.. 4 கிலோ வெள்ளி பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. 60 பவுன் நகை மட்டுமே தொலைந்து போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில், 100 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டும் இன்றி, தற்போது மூன்றாவது நபர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோன்ற திருட்டு நகைகளை வாங்கியதாக மயிலாப்பூர் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.