நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க, வைர நகைகள் காணாமல் போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஐஸ்வர்யாவிடம் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி என்கிற பெண் தான் இந்த நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த கடந்த 4 ஆண்டுகளாக லாக்கரை திறந்து பார்க்காமல் இருந்து வந்ததால், அதனை பயன்படுத்தி கொஞ்டம் கொஞ்சமாக நகைகளை அபேஸ் செய்து வந்துள்ளார் ஈஸ்வரி.