வழக்கு தொடர்வதை விட இப்படி செய்திருக்கலாம்! சமந்தாவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் நச் பதில் கொடுத்த நீதிபதி

First Published Oct 23, 2021, 1:08 PM IST

நடிகை சமந்தா (Samantha) மற்றும் நாக சைதன்யா (Naga chaitanya) விவாகரத்து விவகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்பும் விதமாக செய்திகளை வெளியிட்டு வந்த, 3  யூடியூப் சேனல் மீது சமந்தா தரப்பில் இருந்து அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது சமந்தாவுக்கு செம்ம பதில் கொடுத்துள்ளது நீதிமன்றம்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பொறாமை படும்படி வாழ்ந்து வந்த பிரபல நடிகை சமந்தா திடீர் என கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக கூறியது தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுவரை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே தங்களுடைய விவாகரத்து குறித்தும், என்ன பிரச்சனை காரணமாக பிரிகிறோம் என்பது குறித்தும் தெரிவிக்காத நிலையில் பல்வேறு வதந்திகள் பரவ தொடங்கியது.

சமீபத்தில் கூட சமந்தா தன்னுடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீதமுடன் காட்டிய நெருக்கம் தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என சில வதந்திகள் தீயாக பரவியது. பின்னர் ப்ரீத்தம் சமந்தா தன்னுடைய சகோதரி போன்றவர் என கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதே போல் தன்னை பற்றி பரவிய வதந்திகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் சமந்தா விளக்கம் கொடுத்த போதும், சில யூடியூப் சேனல்கள் சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விவாதங்களை நடத்தின. 'சமந்தா தவறு செய்கிறார்' .. 'சமந்தாவின் விவாகரத்துக்கு என்ன காரணம்' .. என்பது போன்ற விவாதங்களை முன் வைத்தனர்.

சமந்தா, நாக சைதன்யா பிரிந்ததற்கான காரணங்கள் யாருக்கும் தெரியாது. ஆனால் சில யூடியூப் சேனல்களில் பங்கேற்பாளர்களில் சிலர் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவதற்கு இவை தான் காரணம் என யூகங்கள் அடிப்படையில் சில தகவல்களை கூறினர்.

சமந்தா, நாக சைதன்யா பிரிந்ததற்கான காரணங்கள் யாருக்கும் தெரியாது. ஆனால் சில யூடியூப் சேனல்களில் பங்கேற்பாளர்களில் சிலர் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவதற்கு இவை தான் காரணம் என யூகங்கள் அடிப்படையில் சில தகவல்களை கூறினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் சமந்தாவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள நீதிபதி ‘சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்கு தொடர்வதை விட, அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம். பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை பொது களத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள்’ என்று கூறி பதில் கொடுத்துள்ளார். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

click me!