சஞ்சய்க்கு தந்தையை போல் நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும், தன்னுடைய தாத்தாவை போல் படம் இயக்கவே ஆசைப்பட்டார். சஞ்சய்யை திரைப்படத்தில் நடிக்க வைக்க சில பெரிய பெரிய இயக்குனர்கள் கூட, தேடி சென்று வாய்ப்பு கொடுத்த நிலையில்... சஞ்சய் அதை வேண்டாம் என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே போல் விஜய்யிடம் சிலர் அவரின் மகனை நடிக்க வைக்க கூறி கேட்டபோது கூட... விஜய் மிகவும் கூலாக அது சஞ்சய்யின் விருப்பம் தான் அவருக்கு இஷ்டம் இருந்தால் நடிக்கட்டும் என கூறியதாகவே தெரிகிறது.