தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சில இயக்குநர் மற்றும் நடிகர்களின் காம்பினேஷன் செம்ம ஹிட்டாக அமைவது வழக்கம். அப்படி சமீபகாலத்தில் செம்ம தூளாக ஹிட்டுகளை குவித்த காம்பினேஷன் என்றால் அது அட்லி - விஜய் ஜோடி தான்.
undefined
அட்லி இயக்கிய “ராஜா ராணி’ படத்தின் சூப்பர் வெற்றி விஜய்யை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றுத் தந்தது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தெறி’ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது.
undefined
பழைய பாட்ஷா பட டெம்ப்லேட் தான் என்றாலும், ஒரே கேரக்டரில் விஜய்யை இரண்டு விதமான கெட்டப்புகளில் காட்டி ரசிகர்களிடம் வெற்றி பெற்றார் அட்லி. ‘தெறி’ படத்தை தொடர்ந்து விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதை சரிக்கட்டுவதற்காக அதிரடி முடிவெடுத்த விஜய், உடனடியாக அட்லியுடன் அடுத்த கதைக்கு கூட்டணி அமைத்தார்.
undefined
தளபதியை மிடுக்கான போலீஸ் அதிகாரியாக பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையை ஏற்கனவே ‘தெறி’ படம் மூலம் நிறைவேற்றிய அட்லி, அவர்களுடைய அடுத்த ஆசையையும் சரியாக புரிந்து கொண்டார். தளபதியையும் வேட்டி, சட்டையுடன் கிராமத்து கெட்டப்பில் களமிறங்கினால் சூப்பராக இருக்கும் என ஸ்கெட் போட்டு, ‘மெர்சல்’ படத்தை இயக்கினார்.
undefined
போலீஸ், கிராமத்து நாயகன் என விதவிதமாக விஜய்க்கு கெட்டப் மாற்றி அழகு பார்த்த அட்லி, ‘பிகில்’ திரைப்படத்தில் ராயப்பன், மைக்கேல் என இரண்டு கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தார். இரண்டுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போக வசூல் 300 கோடியை தாண்டி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.
undefined
அடுத்தப்படமும் கண்டிப்பாக விஜய் அட்லியுடன் தான் இணைவார் என பேசப்பட்டது. ஆனால் ரூட்டை மாற்றிய தளபதி லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் படத்தையும் நடித்து முடித்துவிட்டார்.
undefined
தற்போது வெற்றிமாறன், முருகதாஸ், பாண்டியராஜன் என அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் கதைகளையும் கேட்டு திருப்தி இல்லாத தளபதி, தற்போது அட்லியை அவருடைய அலுவலகத்திற்கே போய் சந்தித்துள்ளார். இதனால் தமிழ் சினிமாவில் 4வது கமர்ஷியல் பூகம்பம் உருவாக வாய்ப்பிருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்....!
undefined