இது ஒருபுறம் இருக்க , தளபதி விஜய் பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், பேட்டி ஒன்றை கொடுத்தார். அப்போது, 'விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விரைவில் இரவு நேர பாடசாலை தொடக்கப்படும் என்று தெரிவித்தார்'. இந்த பாடசாலை மூலம், பள்ளி சென்று படிக்க முடியாத ஏழை எளிய மாணவர்கள் இலவசமாக இரவு நேரத்தில் கல்வி பயின்று பயனடையும் விதத்தில் இந்த பாடசாலைகள் துவங்க உள்ளதாக அறிவித்தார்.