Actress Perumayi Death : தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பேமஸ் ஆன பெருமாயி என்கிற மூதாட்டி காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அன்னம்பாரிபட்டியை சேர்ந்த இவருக்கு வயது 73. இவர் தமிழில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய தெற்கத்தி பொண்ணு என்கிற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பின்னர் பாரதிராஜா இயக்கிய பல்வேறு திரைப்படங்களிலும் பெருமாயி நடித்துள்ளார்.
23
யார் இந்த பெருமாயி?
காதில் தண்டட்டியுடன் காணப்படும் இவர், நடிகர் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை, தளபதி விஜய்யின் வில்லு போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் உள்பட சுமார் 30 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், கிராமப்புற மூதாட்டியாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் பெருமாயி. அவர் இறுதியாக தண்டட்டி என்கிற படத்தில் நடித்தார். பசுபதி நடிப்பில் உருவான அப்படத்தில் நடித்த பின்னர் சினிமாவில் இருந்து விலகினார் பெருமாயி.
33
மாரடைப்பால் மரணமடைந்த பெருமாயி
உடல்நல குறைவு காரணமாக சமீபகாலமாக அவரால் திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை, இந்நிலையில் இன்று அவர் தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அன்னம்பாரிபட்டியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஊர் பொதுமக்களும் உறவினர்களும் பெருமாயி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.