சூர்யா - கார்த்தியின் தந்தை... பழம்பெரும் நடிகர் சிவகுமாருக்கு கொரோனவா? வெளியான உண்மை தகவல்..!

First Published Nov 30, 2020, 6:52 PM IST

பழம்பெரும் நடிகர் சிவகுமார் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று காரணமாக தனிமையில் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் உண்மை நிலை என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

நடிகர் சிவகுமார், காக்கும் கரங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். மேலும், குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.
undefined
தற்போது தமிழ் சினிமாவில் இவரது மகன்கள், சூர்யா - கார்த்தி என இருவருமே முன்னணி கதாநாயகர்களாக உள்ளனர். நடிகர் சூர்யா சமீபத்தில் நடித்து ஓடிடி தளத்தில் வெளியான "சூரரை போற்று" திரைப்படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
undefined
இந்நிலையில், சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர் தி.நகரில் இருக்கும் லக்‌ஷ்மி இல்லத்தில் தனிமையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
undefined
தொடர்ந்து அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், ஆரோக்கியமான உணவுகளை அவர் எடுத்து கொள்வதாகவும் செய்திகள் வெளியாகின.
undefined
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், நடிகர் சிவகுமாருக்கு தொடர்ந்து செய்யப்பட்ட கொரோனா சோதனையில் நெகடிவ் என வந்துள்ளதாம். எனவே அவருக்கு கொரோனா லேசான அளவில் ஏற்பட்டிருந்தாலும் தற்போது முழுமையாக அதில் இருந்து குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!