2014-ல் வெளியான சூர்யாவின் 'அஞ்சான்' திரைப்படம், பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளுக்கு வரத் தயாராகி வருகிறது. என். லிங்குசாமி எழுதி இயக்கிய இப்படம் வருகிற நவம்பர் 28ந் தேதியன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. சூர்யா நாயகனாக நடித்த இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், தலீப் தாஹில், முரளி சர்மா, சூரி, சேத்தன் ஹன்ஸ்ராஜ், சஞ்சனா சிங், ஆசிப் பஸ்ரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.