தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, திரை நட்சத்திரமாக மட்டுமல்லாது சமூகம், கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்கும் தைரியமாக குரல் கொடுப்பது அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனை பெருமைப்படுத்தும் விதமாக சூர்யாவின் 40வது படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
undefined
பாண்டிராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் புதிய திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆரம்பத்தில் தலைப்பிடப்படாமல் ‘சூர்யா 40’ என்றே தற்காலிகமாக அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததை அடுத்து காரைக்குடியில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
undefined
இதில் சூர்யாவுடன் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
undefined
இன்று சூர்யாவின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், அதனை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு சூர்யா 40 படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ வெளியானது. எதற்கும் துணிந்தவன் எனப் பெயரிடப்பட்ட போஸ்டர் வீடியோவில் கத்தி, துப்பாக்கி என வேட்டி, சட்டையில் விதவிதமாக சூர்யா கெத்து காட்டியிருந்தார்.
Suriya
தற்போது அந்த வீடியோ முழுவதுமாக ஒரு நாள் முடிவதற்குள்ளாகவே 2 மில்லியன் வியூஸ்களைக் கடந்துள்ளது. ட்விட்டரிலும் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு #EtharkkumThunindhavan என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் படக்குழு சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மற்றொரு போஸ்டரையும் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Suriya