நடிகரும் - இயக்குனருமான சுகுமார், அடிக்கடி ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டி மூலம் சில பரபரப்பான கருத்துக்களை பதற வைத்தவர். வைகை புயல் வடிவேலு, "தன்னைப் போலவே இவர் நடிப்பதாக கூறி, இவரை ஆள் வைத்து மிரட்டியதாக கடந்த 2023-ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அதேபோல கடந்த ஆண்டு கூட, திரை உலகில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதை யாரும் வெளியே பேசுவதில்லை. குறிப்பாக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து இவர் பேசிய கருத்து, பேசு பொருளாக மாறியது.