கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றிக்கு பின் அப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம் தான் காந்தாரா. ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து இயக்கியிருந்த இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசானது. முதலில் கன்னட மொழியில் மட்டும் வெளியிடப்பட்ட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.