நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த 30-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அன்று நள்ளிரவி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். தலைவருக்கு என்ன ஆனதோ என ரசிகர்கள் பதறிப்போன நிலையில், அவர் வழக்கமான பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் அக்டோபர் 1-ந் தேதி காலை இதயவியல் நிபுணர் சாய் சதீஷ் தலைமையிலான குழு ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்தது.