வேட்டையின் திரைப்படத்தில் பல சிறப்புகள் உள்ள நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முதல் முறையாக தமிழ் திரையுலகில் இந்த வேட்டையன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு நீதிபதியாக நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
சுமார் 33 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் மற்றும் அமிதாபச்சன் ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் பல முன்னணி நடிகர் நடிகைகளும் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வருகின்ற அக்டோபர் 10ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.