சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரக்ஷிதா சுரேஷ். இவர் தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடல்கள் பாடி இருக்கிறார். கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ என்கிற பாடலை பாடியதும் ரக்ஷிதா தான்.