சன் டி.வி.யின் பிரபல சீரியலில் இருந்து நடிகை விலகல்... ரசிகர்கள் அதிர்ச்சி...!

First Published Feb 9, 2021, 4:28 PM IST

சீரியலில் இருந்து நடிகர், நடிகைகள் யாராவது விலகினால் இனி இவருக்கு பதில் இவர்... என கார்டு போட்டு எபிசோட்களை தொடர்வது வழக்கமான ஒன்று தான். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிலா தொடரில் இருந்து விலகுவதாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சியமந்தா கிரண் தெரிவித்துள்ளது ரசிகர்கள், இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
undefined
சீரியலில் இருந்து நடிகர், நடிகைகள் யாராவது விலகினால் இனி இவருக்கு பதில் இவர்... என கார்டு போட்டு எபிசோட்களை தொடர்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் ரசிகர்கள் மனம் கவர்ந்த சியமந்தா கிரணின் இந்த அறிவிப்பைக் கேட்டு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
undefined
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சியமந்தா கிரண் “அஞ்சலி இனி இல்லை. இந்த புகைப்படங்கள் அனைத்தும் பழைய நினைவுகள். நீலா சீரியலின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகச்சிறந்த அனுபவம். எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் வழங்கப்படது. அதில் நான் வாழ்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்! எல்லாவற்றிற்கும் என் குழுவிற்கு நன்றி. ஆம் அதிகாரப்பூர்வமாக இனி நான் அதில் இல்லை! உங்களின் அனைத்து ஆதரவிற்கும் நன்றி” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
undefined
எதற்காக சீரியலில் இருந்து விலகினார் என எவ்வித காரணமும் சொல்லாமல் சியமந்தா கிரண் நிலா சீரியலில் இருந்து விலகியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சியமந்தாவிற்கு பதிலாக அடுத்து யார் அஞ்சலி கேரக்டரில் நடிக்க உள்ளார்கள் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.
undefined
click me!