“கல்யாண வீடு” சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்... வருங்கால கணவருடன் கொடுத்த சூப்பர் போஸ்கள்...!

First Published Oct 4, 2020, 5:40 PM IST

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியலில் நடித்த நடிகைக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

சன் டி.வி. யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிக ரசிகர்களை கவர்ந்தது “கல்யாண வீடு”.
undefined
திருமுருகன் இயக்கி கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த தொடர் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
undefined
இந்த சீரியலில் கோபிக்கு ஜோடியாக ஜோடியாக சூர்யா கதிரேசன் கேரக்டரில் நடித்திருந்த ஸ்பூர்த்தி கவுடா என்பவர் நடித்து வந்தார்.
undefined
கொரோனா காரணமாக ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட போதும் இவரால் திரும்ப வர முடியாமல் போனது.
undefined
அதனால் இவருக்கு பதிலாக அந்த சூர்யா கதாபாத்திரத்தில் கன்னிகா ரவி என்பவர் நடித்து வருகிறார். இருப்பினும் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் கேட்டு ஸ்பூர்த்தி கவுடாவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
undefined
ஸ்பூர்த்தி கவுடா தனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதால் சீரியலில் இருந்து விலகியதாக கடந்த ஜூலை மாதம் விளக்கம் அளித்தார். இதனால் குஷியான ரசிகர்கள் ஸ்பூர்த்திக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
undefined
இந்நிலையில் ஸ்பூர்த்திக்கும் மைசூரில் உள்ள லலிதா மஹால் பேலஸ் ஓட்டலில் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் பங்கேற்க கோலாகலமாக நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
undefined
தற்போது நிச்சயதார்த்தம் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்பூர்த்தி, வருங்கால கணவரின் முகத்தை காட்டாமல் மறைத்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் உங்களுடைய வருங்கால கணவரின் முகத்தை காட்டுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.
undefined
click me!