திருமண ஆசைக்காட்டி சனம் ஷெட்டியைக் கழட்டிவிட்ட பிக்பாஸ் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...!

First Published Oct 4, 2020, 3:45 PM IST

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன் மீது சனம் ஷெட்டி அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் புகார் அளிக்கப்பட்டது.

2020ம் ஆண்டின் தொடக்கத்தையே கலகலக்க வைத்தார் சனம் ஷெட்டி. பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன்.
undefined
அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணம் கூட நிச்சயிக்கப்பட்டிருந்தது.
undefined
சனம் ஷெட்யின் மூலமாக தான் தர்ஷனுக்கு பிக்பாஸ் 3-ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அவருக்காக 15 லட்சம் ரூபாய் வரை பணத்தை செலவு செய்த தன்னை மனம் மற்றும் உடல் ரீதியாக தர்ஷன் துன்புறுத்தியதாகவும் சனம் ஷெட்டி பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
undefined
இதற்காக காரணத்தை வெளிப்படுத்திய தர்ஷன், தான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த சமயத்தில் சனம் தனது முன்னாள் காதலருடன் பார்ட்டி கொண்டாடியதாக குற்றச்சாட்டினார்.
undefined
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக தர்ஷன் மீது அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சனம் ஷெட்டி.
undefined
இதுதொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.
undefined
இதனைத் தொடர்ந்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் பிக் பாஸ் தர்ஷன் மீது 294(பி)- ஆபாசமாக பேசுதல், 506-மிரட்டல், 420- மோசடி, 354- பெண்ணை மானபங்கப்படுத்துதல் என நான்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
undefined
click me!