கொரோனா வைரஸின் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்த சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால் அங்கிருந்து ஆரம்பித்த கொரோனா வைரஸின் கொடூர ஆட்டம் இப்போது இந்தியாவை பாடாய் படுத்தி வருகிறது.
undefined
ஷூட்டிங் இல்லாததால் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் உள்ளேயே இருந்தாலும் சினிமாக்கரர்களை கொரோனா விடுவதாக இல்லை. அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர், இயக்குநர் ராஜமெளலி என இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது.
undefined
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் சிகிச்சை பலனின்றி காலமானார். அந்த துக்கத்தில் இருந்து ரசிகர்கள், திரைத்துறையினர் மீள்வதற்குள் பிரபல நடிகைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
undefined
இந்நிலையில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவின் அப்பா, அம்மாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
undefined
இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ள அவர், கடந்த ஒரு வாரமாக எனது பெற்றோருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் உள்ள உறவினர்கள், வேலையாட்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டோம். சோகமளிக்கும் விதமாக எனது பெற்றோர்களுக்கு பாசிட்டிவ் ஆகியுள்ளது” என சோகத்துடன் பதிவிட்டிருந்தார்.
undefined
இந்நிலையில் பெற்றோரைத் தொடர்ந்து நடிகை தமன்னாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined