சிராஜுதீனை போலீசார் அழைத்துள்ளனர். இது குறித்து சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் காவல் துறை விசாரணைக்கு வராததால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
தென்னிந்திய சினிமா பிரபலங்களின் தொடர் தற்கொலை அறிமுக நடிகை மற்றும் நடிகர்களுக்கு இடையே அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. அந்த வரிசையில் வாய்தா நாயகியாக நடித்திருந்த பவுலின் ஜெசிக்காவின் மரணம் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வந்துள்ளார் பவுலின் ஜெசிக்கா. டிக் டாக், youtube மூலம் பிரபலமான இவர் சினிமா வாய்ப்புகள் தேடி சென்னைக்கு தஞ்சம் அடைந்த இவர் ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
24
Powlen Jessica
சினிமா ஆசையில் முன்பு சென்னை வந்த இவர் விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூவில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். சமூக வலைதளம் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலம் ராட்சசன், தெறி, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது. அந்த படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோலில் நடித்து வந்த பௌலிங் ஜெசிக்கா. நாசர் நடித்த வாய்தா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
படம் வெளியான நிலையில் ஜெசிக்கா அவரது அப்பார்ட்மெண்டில் மின்விசிறியில் தூக்கு போட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உறவினர்கள் பலமுறை தொலைபேசியில் அழைத்தும் அவர் எடுக்காததை அடுத்து அவரது நண்பர் பிரபாகரனிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பிரபாகரன் பவுலின் ஜெசிக்காவின் வீட்டிற்கு வந்தபோது அவர் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதை அடுத்து சென்னை கோயம்பேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடிகையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு இவரின் தற்கொலை கடிதமும் வெளியாகி இருந்தது.
அந்த கடிதத்தில் "தான் ஒருவரை மனதார விரும்பியதாகவும் அவர் தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் இந்த உலகை விட்டு பிரிவதாகவும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் பவுலின் ஜெசிக்கா எழுதியிருந்தார். விசாரணையில் பவுலிங் ஜெசிக்காவின் கைபேசி காணாமல் போனது தெரியும் வந்தது. அந்த கைபேசி எண்ணையை ஆராய்ந்த போது அவர் இறுதியாக சிராஜுதீன் என்பவருடன் நெடுநேரம் பேசியிருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் விசாரணைக்காக சிராஜுதீனை போலீசார் அழைத்துள்ளனர். இது குறித்து சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் காவல் துறை விசாரணைக்கு வராததால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.