தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனான இவர், அகரம் என்கிற அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்காக உதவி வருகிறார். பல ஆண்டுகளாக இவரது அறக்கட்டளையின் உதவியுடன் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல் கடந்த 44 ஆண்டுகளாக நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவி வருகிறார்.