சிகிச்சைக்கு உதவிய சோனு சூட்... பெண் குழந்தைக்கு அவர் பெயரையே வைத்த பெற்றோர்..!

First Published Jun 23, 2021, 4:13 PM IST

தன்னலம் கருதாது, ஏழை, எளிய, மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து கூட பல உதவிகளை, செய்து வந்த சோனு சூட், பிறக்கும் போதே உடல்நல கோளாறுதான் பிறந்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார். எனவே அவரது பெயரையே பெற்றோர் வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

அனுஷ்காவின் அருந்ததி, சிம்புவுடன் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக வலம் வந்த சோனு சூட், திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது முதல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தார்.
undefined
அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து உதவி கேட்போருக்கு கொடுப்பதற்காக தனது பெயரிலும், மனைவி சோனாலி பெயரிலும் உள்ள 2 கடைகள் 6 குடியிருப்புகள் என மொத்தம் 8 சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.
undefined
இப்படி மக்கள் சேவையில் தீவிரமாக இறங்கியுள்ளதால் சோனு சூட்டிற்கு, தற்போது திரையிலும் நல்ல காலம் ஆரம்பித்துள்ளது. அதாவது ஹீரோவாக நடிக்க பல படங்களில் வாய்ப்பு குவிந்து வருவதாக கூறப்படுகிறது. தன்னலம் கருதாது எளிய மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து கூட உதவ வேண்டும் என முடிவெடுத்துள்ள சோனு சூட்டை அவரது ரசிகர்கள் கோவில் கூட கட்டி பூஜித்து வருகிறார்கள்.
undefined
இன்னிலையில், இவரை கௌரவிக்கும் விதமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களுடைய 747 விமானத்தில் சோனுசூட்டின் பிரம்மாண்டமான போஸ்டரை ஒட்டி சிறப்பித்துள்ளது. இப்படி ஒரு சிறப்பை பெறும் முதல் இந்திய நடிகர் சோனு சூட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
மேலும் தொடர்ந்து எண்ணிலடங்காத உதவிகளை இந்த கொரோனா காலத்தில் செய்து வரும் நடிகர் சோனு சூட், சமீபத்தில் ராஜஸ்தான் போஜ்பூரியை சேர்ந்த தம்பதிகளுக்கு பிறந்த பெண் குழந்தை, பிறகு போதே உடல் நல கோளாறுதான் பிறந்துள்ளது. தங்களது பிஞ்சு குழந்தையின் சிகிச்சைக்காக பல இடங்களில் உதவிக்காக இந்த தம்பதிகள் அழைத்தனர். அப்போது தங்களுடைய குழந்தையின் உயிரை காப்பாற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவை படும் பணம் குறித்து கூறி சோனு சூட்டிற்கு கோரிக்கை ஒன்றை வைத்தனர். இவர்களை பற்றி அறிந்ததும் சோனு சூட் உடனடியாக, குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்தார்.
undefined
இந்நிலையில் அந்த தம்பதிகள் தற்போது சோனு சூட்டின் நினைவாக தங்களுடைய குழந்தைக்கு 'சோனு' என பெயர் வைத்துள்ளனர். தங்களது குழந்தையின் உயிரை காப்பாற்றிய சோனு சூட்டிற்கு வாழ் நாள் முழுவதும் நன்றியுடன் இருப்போம் என தெரிவித்துள்ளனர்.
undefined
click me!