அப்போது பேசிய அவர், அயலான் படத்தில் கம்பியூட்டர் கிராபிக்ஸ் அதிகளவில் இருப்பதால் அதனை முடிக்க தாமதமாகி வருகிறது. தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறை அல்லது ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி இப்படம் குறித்து மேலும் ஒரு சிறப்பம்சத்தை கூறிய சிவகார்த்திகேயன். இதன் கம்பியூட்டர் கிராபிக்ஸ் பணிகளை சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் தான் செய்து வருவதாகவும், படத்தில் பணியாற்றிய பெரும்பாலானோர் நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் என தெரிவித்துள்ளார். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... AK 61 : நடிகர் அஜித் விரும்பாத செயல்! AK61 படத்தின் அப்டேட் கேட்டு கையில் பிளேடால் எழுதிக்கொண்ட ரசிகர்!