அதன்படி, கல்யாணம் பண்ணிக்க சொல்லி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை டார்ச்சர் பண்ண வேண்டாம் என கேட்டுக் கொண்ட அவர், இவ்வாறு கொடுக்கப்படும் அழுத்தங்களால் தான் தவறான திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடப்பதாக கூறினார். அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்னு பிள்ளைகளை விட்டுவிடுங்கள், மேலே இருக்குறவன் அவர்களுக்கான ஒருத்தரை நிச்சயம் அனுப்புவார் என சிம்பு பேசியுள்ளார்.
அவரின் இந்த பேச்சை பார்க்கும்போது, அவரது பெற்றோரும் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி சிம்புவுக்கு டார்ச்சர் கொடுத்து வருவதை மறைமுகமாக தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட சிம்புவின் பெற்றோரும், அவரது சகோதரியும், சிம்புவுக்கு மயிலாடுதுறையை சேர்ந்த பெண்ணை தேடி வருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... வீட்ல சும்மா தான் இருக்கேன்... மீண்டும் காமெடியனாக நடிக்க தயார் - கேப்டன் பட விழாவில் ஓப்பனாக பேசிய சந்தானம்