Shreya Ghoshal: வாவ் செம்ம கியூட்... 6மாத குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு முதல் முறையாக காட்டிய ஸ்ரேயா கோஷல்

Published : Nov 22, 2021, 02:08 PM IST

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு (shreya ghoshal) கடந்த மே மாதம் 22 ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், தற்போது தன்னுடைய குழந்தையின் முகத்தை 6 மாதத்திற்கு பின்னர் ரசிகர்களிடம் காட்டியுள்ளார். இந்த கியூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
110
Shreya Ghoshal: வாவ் செம்ம கியூட்... 6மாத குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு முதல் முறையாக காட்டிய ஸ்ரேயா கோஷல்

'தேவதாஸ்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம், பின்னணி பாடகியாக திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல்.  அந்த படத்தில் இவர் பாடிய 'சலக் சலக்' என்ற பாடல், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

 

210

இவருடைய இனிமையான குரல் ஹிந்தி திரையுலகினரை மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி, உள்ளிட்ட பல்வேறு மொழி ரசிகர்களையும் கவர்ந்தது.

 

310

குறிப்பாக தமிழில் இவர் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் பாடிய முன்பே வா என் அன்பே வா... பாடல் 'விருமாண்டி' படத்தில் இடம்பெற்ற 'உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது எதுவும் இல்ல' பாடல்,  '7 ஜி  ரெயின்போ காலனி' படத்தில் இடம்பெற்ற 'நினைத்து நினைத்து பார்த்தால்'... போன்ற பாடல் தற்போது வரை ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இடம்பிடித்தவை.

 

410

மேலும் இளையராஜா, அனிருத், ஏ.ஆர்.ரகுமான், டி.இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள ஸ்ரேயா கோஷல் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை தமிழில் பாடியுள்ளார்.

 

510

இவருக்கு தமிழ் மொழி தெரியவில்லை என்றாலும், பாடல்களின் வரிகளை அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பது இவரது மிகப்பெரிய பலம் என்றே கூறலாம்.

 

 

610

இந்நிலையில் இவருக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் பின் கர்ப்பமாக இருந்த ஸ்ரேயா கோஷலுக்கு மே 22 ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை ஸ்ரேயா கோஷல் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

 

 

710

மேலும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

 

 

810

இந்நிலையில், தற்போது முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு... மகன் அனைவருடனும் பேசியது போன்ற ஒரு உடையாடலை பதிவு செய்துள்ளார்.

 

 

910

அதில்... "எல்லோருக்கும் வணக்கம். நான் தேவ்யன் எனக்கு இன்றுடன் 6 மாதங்கள் ஆகிறது. தற்போது நான் என்னைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராய்வதிலும், எனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்பதிலும், எல்லாவிதமான படங்களுடன் கூடிய புத்தகங்களைப் படிப்பதிலும், வேடிக்கையான நகைச்சுவைகளைப் பார்த்து சத்தமாகச் சிரிப்பதிலும், என் அம்மாவுடன் ஆழ்ந்த உரையாடல்களிலும் மும்முரமாக இருக்கிறேன். உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் எனக்கு அனுப்பிய அனைவருக்கும் நன்றி. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

1010

ஸ்ரேயா கோஷல் போலவே... செம்ம கியூட்டாக இருக்கும் அவரது மகனுக்கு மகனை கொஞ்சியபடி, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்களும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

click me!

Recommended Stories