பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட ஸ்ரேயா கோஷல்! கொள்ளை அழகு..!

First Published Jun 2, 2021, 4:01 PM IST

பாடகி ஸ்ரேயா கோஷல், கர்ப்பமாக இருந்த நிலையில்... அவருக்கு கடந்த மாதம் மே 22 ஆம் தேதி மதியம் குழந்தை பிறந்த தகவலை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

தேவதாஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம், பின்னணி பாடகியாக திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல். அந்த படத்தில் இவர் பாடிய 'சலக் சலக்' என்ற பாடல், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
undefined
பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடத் துவங்கினார்.
undefined
குறிப்பாக தமிழில் இவர் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் பாடிய முன்பே வா என் அன்பே வா... பாடல் 'விருமாண்டி' படத்தில் இடம்பெற்ற 'உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது எதுவும் இல்ல' பாடல், '7 ஜி ரெயின்போ காலனி' படத்தில் இடம்பெற்ற 'நினைத்து நினைத்து பார்த்தால்'... போன்ற பாடல் தற்போது வரை ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இடம்பிடித்துள்ளது.
undefined
மேலும் இளையராஜா, அனிருத், ஏ.ஆர்.ரகுமான், டி.இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள ஸ்ரேயா கோஷல் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
undefined
தமிழ் மொழி தெரியவில்லை என்றாலும், அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பது இவரது மிகப்பெரிய பலம் என்றே கூறலாம்.
undefined
இந்நிலையில் இவருக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் பின் கர்ப்பமாக இருந்த ஸ்ரேயா கோஷலுக்கு மே 22 ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை ஸ்ரேயா கோஷல் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
undefined
தற்போது இவருக்கு குழந்தை பிறந்து 10 நாட்களே ஆகும் நிலையில், குழந்தையின் புகைப்பதை கணவரோடு சேர்ந்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை மட்டும் இன்றி, தங்களுடைய வாழ்த்துக்களையும் குவித்து வருகிறார்கள்.
undefined
click me!