நடிகர் ஷாருக்கான் மனைவி மற்றும் தொழிலதிபரான கௌரி கானுக்குச் சொந்தமான மும்பையில் உள்ள டோரி என்ற ஆடம்பர உணவகத்தில் போலி பனீர் வழங்கப்படுவதாக யூடியூபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
26
Paneer Originality Test:
பனீரின் தூய்மை சோதனை:
இந்த உணவகத்தில் பனீரின் தூய்மை சோதனையில் தோல்வியடைந்ததாகக் கூறும் வீடியோவை யூடியூபர் சார்தக் சச்தேவ் வெளியிட்டுள்ளார். ஆனால், வீடியோவின் கருத்துப் பிரிவில் உணவகம் இதை மறுத்துள்ளது.
36
Food Testing
உணவுப் பரிசோதனை:
வீடியோவில், பிரபலங்களுக்குச் சொந்தமான உணவகங்களில் வழங்கப்படும் பனீரில் கலப்படம் உள்ளதா என சோதிக்க சச்தேவ் ஒரு உணவுப் பரிசோதனையை மேற்கொள்கிறார்.
46
Celebrity Restaurant Paneer Testing:
மற்ற பிரபலங்களின் ரெஸ்ட்டாரெண்டில் கருப்பு நிறம் தோன்றவில்லை:
ஒரு பாட்டில் அயோடினுடன் அவர் மும்பையில் உள்ள பிரபல உணவகங்களான விராட் கோலியின் ஒன்8 கம்யூன், ஷில்பா ஷெட்டியின் பாஸ்டியன், பாபி தியோலின் சம்ப்ளேஸ் எல்ஸ் போன்றவற்றுக்குச் செல்கிறார். இங்கிருந்து பெறப்பட்ட பனீர் மாதிரிகளில் அயோடின் சோதனையில் கருப்பு நிறம் தோன்றவில்லை.
56
YouTuber claims fake paneer served at Gauri Khan restaurant
ஷாருக்கானின் உணவகத்தில் வழங்கப்பட்ட பனீர் போலியானது
கௌரி கானின் டோரியில் சச்தேவ் இதே சோதனையை மேற்கொண்டபோது, அயோடின் கருப்பு நிறமாக மாறியது. இதனால், ஷாருக்கானின் உணவகத்தில் வழங்கப்பட்ட பனீர் போலியானது என்பது நிரூபணமானதாக யூடியூபர் அறிவித்தார்.
66
Torri Restaurant Statement:
டோரி குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
இது தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் அவர் கூறினார். டோரி குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், டோரியில் 'போலி பனீர்' வழங்கப்படுவதாக வெளியான செய்தியை முற்றிலும் மறுக்கிறோம் என்று கூறியுள்ளது.
எங்கள் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவது முதல் தட்டில் வழங்கப்படும் உணவு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று உணவகம் கூறியுள்ளது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.