இவருடைய வீடு பாலாவின் ஆபீஸ் பக்கத்தில் இருப்பதால், இவரை பார்த்த இயக்குனர் பாலா தான் இயக்கும் படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறியுள்ளார். அதன் படி ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய 'நான் கடவுள்' படத்தில், ஆர்யாவின் தந்தை கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்திருந்தார். இந்த படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் பாலாவிடம் இவராக சென்று வாய்ப்பு கேட்கவில்லை, இந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் பாலா தான் அவரை வற்புறுத்தி இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.