பார்த்திபன் சொல்வது முழக்க முழுக்க பொய்..! காதல் மற்றும் விவாகரத்து குறித்து உண்மையை போட்டுடைத்த நடிகை சீதா!

First Published Dec 19, 2022, 5:34 PM IST

பிரபல நடிகையும், நடிகர் பார்த்திபனின் முன்னாள் மனைவியுமான, சீதா முதல் முறையாக தங்களுக்குள் ஏற்பட்ட விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
 

80-களில் கமல், ரஜினி, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை சீதா. இவர் 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான, 'ஆண்பாவம்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவருடைய முதல் படமே வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து, இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர்.

அந்த வகையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களான, 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்', 'குரு சிஷ்யன்', 'துளசி' போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அந்த வகையில், நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த, 'புதிய பாதை' திரைப்படத்தில் சீதா ஹீரோயினாக நடித்த போது, இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கத்தாரில் நடந்த ஃபிபா உலக கோப்பையை கண்டுகளிக்க குடும்பத்துடன் சென்ற அருண் விஜய்..! வைரலாகும் போட்டோஸ்!

சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் தன்னுடைய காதல் மற்றும் விவகாரம் குறித்து பேட்டி ஒன்று கூறும்போது, சீதா தான் தன்னிடம் முதலில் காதலை கூறியதாகவும்... அவரின் அதிக எதிர்பார்ப்பு காரணமாக தான் இருவருக்கும் இடையே விவாகரத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

பார்த்திபன் கூறியது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என நடிகை சீதா அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றின் கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திபன் தான் தனக்கு அடிக்கடி போன் செய்து அந்த மூன்று வார்த்தையை சொல் என கூறிக் கொண்டே இருப்பார். எனக்கும் அவரை பிடித்து இருந்ததால் நானும் காதலை கூறினேன். இதனை தன்னுடைய தந்தை மற்றொரு போனில் கேட்டு விட்டதால் பெரிய பிரச்சனையே நடந்ததாகவும் கூறியுள்ளார்.

விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ஹீரோ... பல இடங்களில் காயங்களுடன் வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

மேலும் தன்னுடைய கணவன் தனக்கு மட்டும்தான் என எதிர்பார்த்தது என்ன தவறு இருக்கிறது? நான் சராசரி ஒரு மனைவியாக அதை எதிர்பார்த்தது தவறில்லை என நினைக்கிறேன் என கூறியுள்ளது, சமூக வலைத்தளத்தில் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. சீதா - பார்த்திபன் விவாகரத்து பெற்று, 20 வருடங்கள் ஆன பின்னர், தற்போது மீண்டும் இந்த விஷயம் பேசும் பொருளாக மாறியுள்ளது.

சீதா - பார்த்திபன் விவாகரத்து பெற்று பிரிந்தாலும், குழந்தைகள் திருமணம், மற்றும் குடும்ப விசேஷங்கள் என்றால், ஒன்றாக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்ட நிலையில், மகன் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறார். 

click me!