இயக்குனர் கட் செய்ய சொல்லாததால் 5 நிமிடங்கள் எனக்கு லிப்கிஸ் கொடுத்துக்கொண்டே இருந்தார் பிஸ்வஜீத் சாட்டர்ஜி. அப்போது நான் அழுது கண்ணீர் சிந்தினேன். அதைக் கூட கவனிக்காமல் படக்குழுவினர் கேமராவுக்கு பின்னால் இருந்துகொண்டு கை தட்டியும், விசில் அடித்தும் சிரித்தனர். இப்படி ஒரு காட்சி எடுக்கபோவதாக இயக்குனர் ரேகாவிடம் சொல்லவே இல்லையாம்.
இதுகுறித்து பிஸ்வஜீத் சாட்டர்ஜி கூறுகையில், இது முழுக்க முழுக்க இயக்குனரின் ஐடியா என்றும், எதிர்பாராமல் முத்தம் கொடுப்பதே கதைக்கு தேவைப்பட்டதாகவும், அதையே இயக்குனர் செய்ய சொன்னதாகவும் கூறி உள்ளார். இத்தனை ஆண்டுகளாக இதனை வெளியில் சொல்லாமல் சீக்ரெட்டாக வைத்திருந்த ரேகா தற்போது தனது சுயசரிதை மூலம் அதுகுறித்து மனம்விட்டு பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அப்போ ரூ.12 கோடி... இப்போ ரூ.2000 கோடி - ராஜமவுலி பாக்ஸ் ஆபிஸின் ‘பாகுபலி’ ஆன கதை தெரியுமா?