சிறை உணவை சாப்பிட மறுக்கும் ஆர்யன் கான்..!! இப்படி தான் வாழ்கிறாரா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!
First Published Oct 13, 2021, 1:32 PM ISTஆர்யன் கானின் (Aryan khan) ஜாமீன் மனு கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அக்டோபர் 11 அன்று, இந்த விவகாரம் என்டிபிஎஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அமித் தேசாய் நீதிமன்றத்தில் ஆரியனின் வழக்கை எதிர்த்துப் போராடி, அவரது ஜாமீன் மனுவை விசாரிக்க அடுத்த தேதியை கோரினார். இப்போது ஆர்யனின் ஜாமீன் நீதிமன்றத்தில் இன்று அதாவது அக்டோபர் 13 மதியம் 3 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் ஆர்யன் கான் சிறையில் தனது நாட்களை எப்படி செலவிடுகிறார் என்பது குறித்தும், அவரது நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.