மும்பையில் இருந்து கோவா சென்ற கப்பலில் போதை பொருள் பார்ட்டி நடப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், நடத்தப்பட்ட சோதனையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன், உட்பட 8 பேர் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் கைது செய்யப்பட்டார். ஆர்யனும் மற்ற ஏழு பேரும் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, விசாரணைக்காக என்சிபி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.