'செம்பருத்தி' சீரியலில் இருந்து திடீர் என நீக்கப்பட்டதால் கண்ணீர் விட்டு கதறிய நடிகை..! ஏன்?

First Published Nov 7, 2020, 5:12 PM IST

இல்லத்தரசியல் மத்தியில், குறிப்பாக ஒரு சில சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘செம்பருத்தி’ தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
undefined
கார்த்திக் ராஜ், ஷபானா உள்ளிட்டோர் நடித்து வரும் இத்தொடரில் நடிகை பிரியா ராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
undefined
அதே போல் ‘அகிலாண்டேஸ்வரி’ கதாபாத்திரத்துக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
undefined
அகிலாண்டேஸ்வரியின் 2-வது மருமகளாக நடித்து வருபவர் ஜனனி அசோக் குமார். இவரது கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.
undefined
இந்நிலையில் இவர் தான் நடத்தி வரும், யு டியூப்பில் லைவ்வில் அழகு குறிப்பு குறித்து பேசி கொண்டிருந்த போது திடீர் என ஒரு அழைப்பிதழ் வந்ததாகவும், செம்பருத்தி சீரியலில் தன்னுடைய நடிப்பு முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
undefined
மேலும், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இனி நான் நடிக்க மாட்டேன். ஐஸ்வர்யா கதாபாத்திரத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்குத் தெரியும். இனிமேல் ஐஸ்வர்யாவாக நடிக்க இருப்பவருக்கு உங்களது ஆதரவைக் கொடுங்கள்” என்று சொல்லிக் கொண்டே திடீரென தான் நீக்கப்பட்டதை தன்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்று கண்ணீர் விட்டு கதறினார்.
undefined
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவவே, இவருக்கு பலர் தங்களுடைய ஆறுதலை கூறி வருகிறார்கள்.
undefined
அதே நேரத்தில் திடீர் என செம்பருத்தி சீரியலில் இருந்து இவர் விலக்கப்பட காரணம் என்ன என கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதற்கான பதிலையும் ஜனனி விரைவில் கூறுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
undefined
click me!