நடிக்க வருவியாடா... வடிவேலுவை நெஞ்சுலயே மிதிச்சு துரத்திவிட்டாரு கவுண்டமணி - பிரபல நடிகர் சொன்ன ஷாக் தகவல்

Published : Mar 04, 2023, 09:32 AM IST

என் ராசாவின் மனசிலே படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலுவை நெஞ்சுலயே மிதிச்சு கவுண்டமணி துரத்திவிட்டதாக நடிகர் சிசர் மனோகர் தெரிவித்துள்ளார்.

PREV
16
நடிக்க வருவியாடா... வடிவேலுவை நெஞ்சுலயே மிதிச்சு துரத்திவிட்டாரு கவுண்டமணி - பிரபல நடிகர் சொன்ன ஷாக் தகவல்

நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இடையே சில ஆண்டுகள் இவர் நடிக்க தடை போட்டாலும், அவருக்கான மவுசு மக்கள் மத்தியில் குறைந்தபாடில்லை. அவரது இடத்தை நிரப்ப வேறு எந்த நடிகராலும் முடியவில்லை என்பது தான் இதற்கு காரணம். தற்போது ரீ-எண்ட்ரி கொடுத்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் வடிவேலு.

26

இப்படி சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் வடிவேலு, நிஜ வாழ்வில் மிகவும் சுயநலமானவர் என அவருடன் நடித்த நடிகர்கள் பலரும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் வடிவேலு கவனமாக இருப்பார் என்றும் அவர் மீது தொடர்ந்து பல்வேறு நடிகர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மீசை ராஜேந்திரன், முத்துக்காளை என ஏராளமான நடிகர்கள் அண்மையில் வடிவேலு குறித்து மனம்திறந்து பேசிய நிலையில், தற்போது நடிகர் சிசர் மனோகர் வடிவேலுவை கவுண்டமணி மிதித்த சம்பவம் குறித்து பேசி உள்ளார்.

36

சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்காக பயில்வான் ரங்கநாதன், சிசர் மனோகரை நேர்காணல் செய்தார். அதில் சிசர் மனோகர் பேசியதாவது, வடிவேலுவை சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி கொடுத்ததே நான் தான். ராஜ்கிரண் கம்பெனியின் நான் புரடக்‌ஷன் மேனேஜராக இருந்தபோது, வடிவேலு என்னிடம் ஒரு 30 நாள் வேலை பார்த்தார். அப்போது நடிக்க ஆசைப்பட்ட அவருக்கு என்ராசாவின் மனசிலே படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்க நான் தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தேன்.

இதையும் படியுங்கள்... இந்த காலத்துல இப்படி ஒரு ஹீரோயினா..! படம் பிளாப் ஆனதால்... சம்பளம் வேண்டாம் என சொன்ன ‘வாத்தி’ நடிகை சம்யுக்தா

46

அப்போது வடிவேலு ஒரு சீனில் வடிவேலுவின் நடிப்பை பார்த்து அங்கிருந்தவர்கள் எல்லாம் கைதட்டிவிட்டனர். அப்போது அங்கு வந்த கவுண்டமணி. நம்மளைவிட காமெடி ஆர்டிஸ்ட் யாராவது வந்திருக்காங்களா என கேட்டார். அப்போ நான் தான் அவரிடம், வடிவேலு நம்மகிட்ட வேலைபார்த்த பையன் தான். மதுரைக்காரன், இந்த சீன் முடிஞ்சதும் அடுத்த சீன் நீங்க அவன மிதிக்கிற சீன் எடுக்க போறாங்கனு சொன்னேன்.

56

இதைக்கேட்டு டென்ஷன் ஆன கவுண்டமணி, அவன் அவன் தேனாம்பேட்டையில் இருந்து வந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காம காத்து கிடக்கிறான். நீ என்ன மதுரைல இருந்து ஆள கூட்டிட்டு வந்து நடிக்க வைப்பியானு ராஜ்கிரணிடம் கேட்டார். உடனே ராஜ்கிரண், உங்ககிட்ட அடிவாங்குற ஒரு சீன் தான் நடிப்பான்னு சொன்னார். இதையடுத்து அந்த சீன் எடுக்கும்போது கவுண்டமணி, வடிவேலு நெஞ்சுல உண்மையிலயே மிதிச்சாரு.

66

நடிக்க வருவியாடா...  நடிக்க வருவியாடானு சொல்லியே மிதிச்சாரு. அந்த சீன் முடிஞ்சதும் வடிவேலு என்கிட்ட வந்து அண்ணேன் நெஞ்சிலயே மிதிச்சிட்டாருனேனு சொன்னான். விடு நீ பெரிய ஆள் ஆகிடுவனு நான் சொன்னேன். அப்படி அவனுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்து எனக்கு நானே ஆப்பு வச்சிக்கிட்டேன். வடிவேலால நிறைய படத்துல இருந்து என்னை தூக்கிருக்காங்க. அதுக்கப்புறம் வடிவேலு இருக்குற பக்கமே போறது இல்ல” என சிசர் மனோகர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Watch : செம்ம மாஸா இருக்கே... வெளியானது வாரிசு படத்தின் டெலிடட் சீன்

Read more Photos on
click me!

Recommended Stories