நடிகர் சத்யராஜ், 1954ம் ஆண்டு கோவையில் பிறந்தார். இவர் தனது சினிமா கெரியரில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். சத்யராஜ் நடிகனாவதை அவரது தாயார் விரும்பவில்லை, இருப்பினும் அவர் ஹீரோவாகும் கனவை கைவிடவில்லை. 22 வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த சத்யராஜ், கடந்த 1978-ம் ஆண்டு ‘சட்டம் என் கையில்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இவர் தென்னிந்திய படங்களில் மட்டுமின்றி பாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் என்கிற இந்தி படத்தில் சத்யராஜ் தமிழராகவே நடித்திருந்தார்.