100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா

First Published Apr 1, 2023, 11:23 AM IST

விவாகரத்து குறித்து நடிகை சமந்தா தெரிவித்த கருத்து சினிமா வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

பிரபல நடிகையான சமந்தா, தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவிடமிருந்து அக்டோபர் 2021ல் விவாகரத்து பெற்றார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கு சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.

அண்மையில் வெளியாகிய யசோதா பட நிகழ்ச்சியில் இதுபற்றி நடிகை சமந்தா கண்ணீருடன் தெரிவித்தது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

நடிகை சமந்தா தனது நோயுடனான போராட்டங்களைப் பற்றி வெளிப்படையாகக் கூறியது, பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டியது என்றே சொல்லலாம்.

60 பவுன் கிடையாது.. மொத்தம் 200 பவுன் காணோம்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கில் புது ட்விஸ்ட்

சமந்தா தனது வரவிருக்கும் ‘சாகுந்தலம்’ படத்தின் ப்ரோமோஷனின் போது, பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அப்போது என்னுடைய ஒவ்வொரு நலம் விரும்பிகளும், குடும்ப உறுப்பினர்களும் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

ஆனால் அதைச் செய்வதில் நான் உறுதியாக இருந்தேன். விவாகரத்து பெற்ற பிறகு அதே வீட்டில் உட்கார விரும்பவில்லை. தான் எந்த தவறும் செய்யவில்லை. நான் 100 சதவீதம் உண்மையாகவே இருந்தேன் என்றும் சமந்தா பகிர்ந்துள்ளார். சமந்தா பேசிய இக்காணொளியை ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

அட்ராசக்க... தீவிரம் காட்டும் பாலா! அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியானது!

click me!