கேரளாவில் படப்பிடிப்பு தளத்தில் குடிபோதையில் புகைப்படம் எடுக்க வந்தவரையும், பின்னர் அவர் அழைத்து வந்த ஏழு பேர் கொண்ட கும்பலையும் எதிர்கொண்டதாக நடிகை சாய் தன்ஷிகா கூறியுள்ளார்.
பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ, ஐந்தாம் வேதம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பால் கவனம் ஈர்த்தவர் சாய் தன்ஷிகா. அவர் நடிப்பில் தற்போது ரிலீஸ் ஆகி உள்ள படம் யோகி டா. அப்படத்தின் புரமோஷனின் போது நடிகை சாய் தன்ஷிகா சொன்ன தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தை நடிகை சாய் தன்ஷிகா பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பின் போது ஒருவர் தன்னிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று வந்ததாகவும், அவர் மது அருந்தியிருந்ததால் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை என்றும் சாய் தன்ஷிகா கூறியுள்ளார்.
24
குடிபோதையில் செல்பி எடுக்க வந்த ரசிகர்
அவர் கூறியதாவது : "கேரளாவில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது, பிரேக் விட்டபோது நான் கேரவனுக்குச் சென்றேன். என் உதவியாளரும் உடன் இருந்தார். அங்கே ஒருவர் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று வந்தார், அவர் குடித்திருந்தார். 'நீங்கள் குடித்திருக்கிறீர்கள், புகைப்படம் எடுக்க முடியாது' என்று சொன்னபோது அவர் பிரச்சனை செய்தார். வேறு வழியில்லாமல், அவருக்கு நல்ல அடி கொடுத்து அனுப்பினேன். அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் அந்த வழியாகச் சென்றுவிட்டார். நானும் கேரவனில் ஏறிக்கொண்டேன்" என்று சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார்.
34
திருப்பி அடித்த சாய் தன்ஷிகா
தொடர்ந்து பேசிய அவர், "பிறகு நான் வெளியே வரும்போது, அவர் ஒரு ஏழு பேருடன் சேர்ந்து வந்தார். அதன்பிறகு அங்கே ஒரு பெரிய சண்டையே நடந்தது. நான் கற்ற தற்காப்புக் கலைகளை தேவையான இடத்தில் பயன்படுத்தலாம் அல்லவா. அது ஒரு பாதுகாப்பு. இறுதியில் இயக்குநரும், ஹீரோவும் சேர்ந்து என்னை பிடித்து வைத்தனர். அப்போதும் கோபம் தணியவில்லை. என்னுடன் இருப்பவரை யாராவது தாக்கினால் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்று சாய் தன்ஷிகா கூறினார்.
இதற்கிடையில், தமிழ் நடிகர் விஷாலுடன் சாய் தன்ஷிகாவின் திருமணம் உறுதியாகியுள்ளது. நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகள் முடிந்தவுடன் தங்கள் திருமணம் நடைபெறும் என்று சாய் தன்ஷிகா சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது நடிப்பில் பிசியாக உள்ள சாய் தன்ஷிகா, யோகி டா பட வெளியீட்டில் பிசியாக இருக்கிறார். ஸ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில் வி.செந்தில்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்கி உள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை இயக்குநரே எழுதியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.