போதை பார்ட்டியில் அதிரடி ரெய்டு.. கொத்து கொத்தாக சிக்கிய நடிகைகள்! சென்னையில் பரபரப்பு.!

Published : Feb 06, 2026, 11:55 AM IST

Chennai Cinema Actress: சென்னையில் சினிமா பிரபலங்களுக்கு உயர் ரக போதைப்பொருட்களை விற்பனை செய்த வழக்கில் பிரபல நடிகை உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

PREV
15
தமிழகத்தில் போதைப் பொருள் அதிகரிப்பு

தமிழகத்தில் சமீப காலமாக போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான செய்திகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரழிந்து வருகின்றன. மற்றொரு புறம் குற்றச்சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் குறைந்தபாடியில்லை.

25
போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ்

இந்நிலையில் போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் பிரபல சினிமா நடிகை மற்றும் அவரது தோழி, ஆண் நண்பர்கள் உட்பட 8 பேர் சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு வடபழனி, சாலிகிராம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சினிமா பிரபலங்களுக்கு அதிகளவில் மெத்தாம்பெட்டமின் உள்ளிட்ட உயர் ரக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நெசப்பாக்கம் ஓம் சக்தி நகர் 4வது தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன்(33) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

35
போதைப்பொருள் சினிமா நடிகை கைது

அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை கோவூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் குமார்(31) என்பவரும் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் திரைப்பட நடிகை மற்றும் துணை நடிகை ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகை அஞ்சு கிருஷ்ணா (30), துணை நடிகை வின்சி நிவேதா (26) மற்றும் இவர்களது நண்பர்களான கார்த்திக் ராஜா (31), யஸ்வந்த் (25), ஸ்ரீராம் நடராஜன் (32), ஆல்வின் (26) ஆகிய மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

45
கார் செல்போன் பறிமுதல்

கைதான 9 பேரிடம் இருந்தும் உயர் ரக ஓஜி வகை கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் நடிகையின் செல்போனை போலீசார் சோதனை செய்த போது, அவரிடம் வாடிக்கையாக போதைப்பொருள் வாங்கிய சக சினிமா பிரபலங்கள் பலர் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

55
போதை பொருள் மூலம் பல லட்சம் சம்பாதித்த நடிகை

இந்த போதை பொருள் மூலம் பல லட்சம் ரூபாயை வின்சி நிவேதா சம்பாதித்துள்ளார். அந்த வீட்டில் கேரளாவை சேர்ந்த தனது தொழில் பாட்னரான அஞ்சு கிருஷ்ணன் என்பவரையும் சேர்த்துள்ளார். கைதான நடிகை, ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதும், மற்றொருவர் திரைப்படங்களில் துணை நடிகையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories