விஜயுடன் மோதல்..சமாளிக்க முடியல..எடப்பாடியார் முன்னிலையில் புலம்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்

First Published Nov 5, 2022, 4:14 PM IST

ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை, மனைவி என்று இருக்கும் போதே பல பிரச்சினைகள் வரும் அதை சமாளிப்பது கடினம் எனக் கூறியுள்ளார்.

S. A. Chandrasekhar

நடிகர் விஜய் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார். விஜய் திரை உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக கால் ஊன்றி உள்ளார்.  இவர் நடித்த பல படங்களும் அதிக வசூலை கடந்துள்ளது. தொடர்ந்து வெற்றி படங்களை தந்து தமிழக ரசிகர்களை அதிகப்படுத்திக் கொண்ட விஜய் தற்போது டோலிவுட் பக்கம் நேரடியாக களமிறங்கி உள்ளார்.  அதன்படி வாரிசு படம் உருவாகி வருகிறது. அங்கு பிரபல இயக்குனராக இருக்கும் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.

S. A. Chandrasekhar

நடிகர் விஜய் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார். விஜய் திரை உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக கால் ஊன்றி உள்ளார்.  இவர் நடித்த பல படங்களும் அதிக வசூலை கடந்துள்ளது. தொடர்ந்து வெற்றி படங்களை தந்து தமிழக ரசிகர்களை அதிகப்படுத்திக் கொண்ட விஜய் தற்போது டோலிவுட் பக்கம் நேரடியாக களமிறங்கி உள்ளார்.  அதன்படி வாரிசு படம் உருவாகி வருகிறது. அங்கு பிரபல இயக்குனராக இருக்கும் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு...actress Poonam Bajwa : மத்திய அழகை அம்சமாய் காட்டி...கிறங்கடிக்கும் பூனம் பஜ்வா

அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட விஜயை அரசியல் தலைவராக்கும் எண்ணத்தில் முன்னெடுப்புகளை செய்து வந்தார் எஸ்.ஏ. சந்திரசேகர். அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் விஜய்க்கு பிடிக்காததால் தனது தந்தைக்கு எதிராக கோர்ட் வரை சென்று விட்டார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பும் ஏற்பட்டு பல நாட்களாக சந்திக்கவே இல்லை என்று கூட கூறுகிறார்கள்.

சமீபத்தில் எஸ்.ஏ   சந்திரசேகர் தனது பிறந்த நாளை கொண்டாடினார் அந்த பிறந்தநாள் விழாவை அடுத்து சதய விழாவும் நடைபெற்றது. ஆனால் இந்த விழாக்களுக்கு விஜயோ அவரது மனைவியோ, பிள்ளைகளோ யாருமே கலந்து கொள்ளவில்லை.இதனால்  பிரபல நடிகராக இருக்கும் விஜய் என்னதான் மனக்கசப்பு இருந்தாலும் தனது தந்தையின் விழாவிற்கு வராத இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இதற்கு இடையே விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் ஒரு தனி கூட்டமே உருவாகி மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் வெற்றியும் கண்டு விட்டனர். இவர்களுக்கு மறைமுகமான ஆதரவையும் விஜய் தெரிவித்து வருகிறார். 

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர் தனது மகன் குறித்து பேசி இருந்தது வைரலாகி வருகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நேற்று எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் என்ன பெயரில் தொண்டு நிறுவன தொடக்க விழா நடைபெற்றது. 

vijay family pic

இதில் தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விஜயின் தந்தை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது மேடையில் பேசிய சந்திரசேகர், எடப்பாடி பழனிச்சாமி எப்படி ஆட்சி செய்வாரோ என சந்தேகம் எனக்கு இருந்தது. அவரை பலமுறை விமர்சித்திருக்கிறேன். ஆனால் சாதாரண ஒருவர் முதல்வராக வந்து அமர்ந்தார். அவர் முதல்வர் பதவிக்கு சிறந்த நிர்வாகி என்று உறுதிப்படுத்தி இருக்கிறார் என புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து தன் குடும்பத்தை பற்றி பேசிய அவர் எவ்வளவு இக்கட்டான நேரத்திலும் அவரிடம் சிறப்பு மட்டுமே வரம். ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை, மனைவி என்று இருக்கும் போதே பல பிரச்சினைகள் வரும் அதை சமாளிப்பது கடினம் எனக் கூறியுள்ளார்.

click me!