'ரோஜா' சீரியல் நடிகை ஷாமிலி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

First Published Feb 11, 2021, 6:26 PM IST

தன்னுடைய பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி அவதூறு பரப்பி வருவதாக, பிரபல சின்னத்திரை நடிகை ஷாமிலி சுகுமார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ரோஜா சீரியலில், இளம் வில்லியாக மிரட்டி வரும் அனு என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஷாமிலி சுகுமார்.
undefined
தென்றல் சீரியல் மூலம் அறிமுகமாகி, தற்போது எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும், பின்னி பெடல் எடுக்கும் அளவிற்கு நடிப்பு திறமையை வளர்த்து கொண்டுள்ளவர் ஷாமிலி.
undefined
தன்னுடைய 20 வயதில் சீரியலில் நடிக்க துவங்கிய ஷாமிலி கடந்த 9 வருடங்களாக பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
undefined
சென்னையை சேர்ந்த ஷாமிலி... இளநிலை கல்லூரி படிப்பை முடித்ததும் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சீரியலை தேர்வு செய்தார். தற்போது இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.
undefined
சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார் ஷாமிலி.
undefined
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் என்கிற பெயரில் போலி இன்ஸ்டா கணக்கு வலம் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
undefined
அந்த பக்கத்தில் மர்ம நபர் ஷாமிலி பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் அவதூறுகளை பரப்பி வருவதாகவும், மேலும் ஷாமிலி சுகுமாரன் வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
undefined
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து விசாரணை நடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
undefined
click me!