சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சிரியலுக்கென ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முதல் 10 இட டிஆர்பியை பெரும் சீரியலில் ரோஜாவும் உண்டு. ரோமன்ஸ் ஆக்சன் என சீரியல் ரசிகர்களை தன வசம்கட்டி வைத்திருந்தனர் ரோஜாவும், அர்ஜுனும்.
25
roja arjun ( sibbu suryan )
நட்சத்திர பட்டாளம் :
இதில் ரோஜாவாக பிரியங்கா நல்காரியம் அர்ஜூனாக சிப்பு சூர்யன்-ம் கலக்கி வந்தனர். இந்த சீரியலில் வடிவுக்கரசி, மெட்டி ஒளி புகழ் காயத்ரி சாஸ்திரி, டாக்டர் சர்மிளா, ராஜேஷ் என பெரிய நட்சத்திர கொண்டாட்டமாக ரோஜா ஒளிபரப்பாகி ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ரோஜா நாயகனான சிப்பு அர்ஜுன் சமீபத்தில் சீரியலில் இருந்து விலகுவதாக கூறி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார். அதிக ரசிகைகள் பட்டாளத்தை கொண்ட சிப்பு சன் தொலைக்காட்ச்சி ஹீரோக்களில் பிராப்ளமானவராக உள்ளார். இவரது திடீர் விலகல் அறிவிப்பு தொடர்ந்து, நடிகரின் சமூக ஊடக கணக்குகள் ரசிகர்களின் கவலைகளால் நிரம்பி வழிகின்றன.
சன் டிவி விருது வழங்கு நிகழ்ச்சிக்கு வந்த அர்ஜுன் ரசிகைகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இவ்வாறு வெறித்தனமாக ரசிகைகள் பட்டாளத்தை கொண்ட அர்ஜுன் தற்போது விலகல் குறித்த அவரது பேன்கள் முடிவை மாற்ற கூறி கதறியதால் தனது முடிவை அறுபரிசீலனை செய்வதாக அர்ஜுன் இன்ஸ்டா பதிவு செய்துள்ளார்.
அதில் "கடந்த சில நாட்களாக எனது ரசிகர்களிடமிருந்து நான் உணர்ந்த அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் கடவுளுக்கு நன்றி. பல செய்திகள், அழைப்புகள், இடுகைகள், குறிச்சொற்கள், கருத்துகள், ஹேஷ்டேக்குகள், CDP ஆகியவற்றால் நான் ஆழ்ந்து மூழ்கிவிட்டேன்...இதை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஆனாலும் நீங்கள் அனைவரும் அதைச் செய்துவிட்டீர்கள்.
நான் அனைத்திற்கும் எனது ரசிகர்கள்தான் காரணம், என்னை நானாக மாற்றியதற்காக அவர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதனால் நான் விலகுவதற்கான எனது முடிவை மறுபரிசீலனை செய்தேன், உங்களுக்குப் பிடித்த அர்ஜுனாகத் தொடர்வேன்.இதனால் நிகழ்ச்சியிலிருந்து விலகும் முடிவை சிப்பு சூர்யன் மறுபரிசீலனை செய்தார்.