தமிழ் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். இவர்களெல்லாம் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். இருப்பினும் இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில், தமிழ் சினிமாவில் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ராஜ்கிரண் தான் என கூறப்பட்டு வந்தது. இதனை சமீபத்திய பேட்டியில் அவரே உறுதி செய்துள்ளார்.