இதையடுத்து கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் என தமிழில் ஷாலினி நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகின. இவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித்தை திருமணம் செய்த பின் சினிமாவில் இருந்து ஒரே அடியாக விலகிவிட்டார் ஷாலினி. தற்போது இவருக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.