ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!

Published : Dec 10, 2025, 08:38 AM IST

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'படையப்பா' டிசம்பர் 12-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அப்படத்தில் நீலாம்பரியாக நடிக்க இருந்த நடிகை பற்றி சூப்பர்ஸ்டார் பேசி இருக்கிறார்.

PREV
14
Ramya Krishnan Not The First Choice For Neelambari character

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படையப்பா, ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகும். 1999-ல் வெளியான இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் இன்றும் பேசப்படுகிறது. மேலும், ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரமும் பெரும் கவனம் பெற்றது. படையப்பாவின் இரண்டாம் பாகத்தையும் ரஜினிகாந்த் சமீபத்தில் அறிவித்திருந்தார். அப்படத்திற்கான டிஸ்கசன் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் படையப்பா மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது. வருகிற டிசம்பர் 12ந் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று இப்படம் வெளியாகிறது.

24
நீலாம்பரி பற்றிய ரகசியத்தை சொன்ன ரஜினி

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் மிகவும் ஹைலைட்டாக அமைந்தது. அந்த கதாபாத்திரத்தை அவரை தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது என தோன்றும் அளவுக்கு நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு முதலில் ஐஸ்வர்யா ராயை அணுகியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஐஸ்வர்யாவுக்காக காத்திருக்கத் தயாராக இருந்ததாகவும், ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறி உள்ளார். ரீ-ரிலீஸ் தொடர்பான ஒரு வீடியோவில் ரஜினிகாந்த் இப்படம் குறித்துப் பேசினார்.

34
நீலாம்பரியாக நடிக்க மறுத்தது யார்?

"படத்தில் மிகவும் சக்திவாய்ந்த கதாபாத்திரம் நீலாம்பரி. அந்த வேடத்தில் யார் நடிப்பது என்ற விவாதம் வந்தபோது, என் மனதில் ஐஸ்வர்யா ராய் இருந்தார். ஏனெனில், அந்த கதாபாத்திரத்தின் அனைத்து மேனரிசங்களையும் நான் ஐஸ்வர்யாவிடம் கண்டேன். அந்த நேரத்தில் அவர் மிகவும் பிசியாக இருந்தார். நாங்கள் அவரை அணுகினோம். ஆனால் ஒரு மாதம் ஆகியும் ஐஸ்வர்யா ராய் எந்த பதிலும் தரவில்லை. இப்போது பிசியாக இருப்பதாகவும், பிறகு செய்வதாகவும் சொல்லியிருந்தால், நாங்கள் ஒரு வருடம் கூட காத்திருக்கத் தயாராக இருந்தோம். அவருக்கு விருப்பமில்லை என்று பின்னர் தெரிந்தது. அதன் பிறகுதான் வேறு யாரை அணுகுவது என்று யோசித்தோம்," என கூறி இருக்கிறார் ரஜினிகாந்த்.

44
ரம்யா கிருஷ்ணனுக்கு வாய்ப்பு சென்றது எப்படி?

மேலும் "ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித், மீனா போன்றோரையும் பரிசீலித்தோம். ஆனால், அவர்களால் ஐஸ்வர்யா போல சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்த முடியாது என்று தோன்றியது. அப்போதுதான் ரவி, 'ரம்யா கிருஷ்ணன் நடித்தால் நன்றாக இருக்கும்' என்று கூறினார். முதலில் எனக்கு ரம்யா கிருஷ்ணன் மீது சந்தேகம் இருந்தது. ஆனால், அந்த கதாபாத்திரத்திற்குரிய நடனம், வசன உச்சரிப்பு போன்றவற்றை ரம்யாவால் செய்ய முடியும் என்று இயக்குனர் தெரிவித்தார். அப்படித்தான் நீலாம்பரி கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனிடம் சென்றது," என்று ரஜினிகாந்த் கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories