நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ஜெயிலர் படத்தின் ரிலீஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்று இருக்கிறார்.
24
rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் தனது படங்களின் ரிலீசுக்கு முன்னர் இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக அண்ணாத்த பட ரிலீஸ் சமயத்தில் அவரால் இமயமலை செல்ல முடியவில்லை. இந்நிலையில், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இமயமலைக்கு சென்றுள்ளார் ரஜினி. அங்கு ஒரு வார காலம் தங்கி அங்குள்ள ஆன்மீக தளங்களில் ரஜினிகாந்த் தரிசனம் செய்ய உள்ளாராம்.
இன்று காலை இமயமலைக்கு கிளம்பும் முன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லவில்லை தற்போது செல்கிறேன் என கூறிய அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அதன்படி, ஜெயிலர் படம் எப்படி இருக்கு என கேட்டனர். இதற்கு பதிலளித்த ரஜினி, அதை நீங்க தான் சொல்லனும், படம் பார்த்துட்டு சொல்லுங்க என தன் சிக்னேச்சர் ஸ்மைல் உடன் கூறினார்.
44
பின்னர் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பியதும் அதற்கு பதிலளிக்காமலேயே காரில் கிளம்பிவிட்டார் ரஜினி. பின்னர் விமான நிலையம் வந்த ரஜினிகாந்தை போட்டோ எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை பத்திரமாக விமான நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.