இன்று காலை இமயமலைக்கு கிளம்பும் முன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லவில்லை தற்போது செல்கிறேன் என கூறிய அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அதன்படி, ஜெயிலர் படம் எப்படி இருக்கு என கேட்டனர். இதற்கு பதிலளித்த ரஜினி, அதை நீங்க தான் சொல்லனும், படம் பார்த்துட்டு சொல்லுங்க என தன் சிக்னேச்சர் ஸ்மைல் உடன் கூறினார்.