ரஜினி நடிப்பில் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கியுள்ள இத்திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு உலகளவில் எதிர்பார்ப்பு எகிறிய வண்ணம் உள்ளது. ஜெயிலர் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் இப்படத்திற்கு அதிகளவில் மவுசு உள்ளது.