இதைப்பார்த்து ஷாக் ஆன இயக்குனர் மெஹர் ரமேஷ், பதறிப்போய் டுவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், 2015 இல் வேதாளம் படம் பார்த்தபோது அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அண்ணன், தங்கை பாசத்துடன் அதன் ஒரிஜினல் கதையை இயக்குனர் சிவா உருவாக்கி இருந்ததை நான் ரசித்தேன். இது மில்லியன் கணக்கான மக்களுடன் பிரதிபலிக்கும் ஒரு உணர்வு. அதை எங்கள் தெலுங்கு ரசிகர்களுக்கும் காட்ட விரும்பினேன்.
2009-ல், அஜித்தின் பில்லாவை டார்லிங் பிரபாஸை வைத்து ரீமேக் செய்தேன், இப்போது மீண்டும் அஜித் சாரின் ஆக்ஷன் என்டர்டெய்னரான “வேதாளம்” படத்தை மெகாஸ்டாரை வைத்து போலா ஷங்கராக உலகம் முழுவதும் 2 நாட்களில் ரிலீஸ் ஆக உள்ளது. வாய்ப்புக்கு மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் ‘அந்த பயம் இருக்கணும்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சிறுவாபுரி கோவிலில் தீண்டாமை கொடுமை நடந்ததா? நடிகர் யோகி பாபு பரபரப்பு விளக்கம்!