இப்படம் கொமரம் பீம் மற்றும் சீதாராம ராஜு ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் கொமரம் பீம் ஆக ஜூனியர் என்.டி.ஆரும், சீதாராம ராஜுவாக ராம்சரணும் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது.